சன் டிவி ராமாயணம் தொடரை ஒளிபரப்பப் போகிறதாம். அது தொடர்பான விளம்பரம் கீழே . . .
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
சன் டிவி ராமாயணம் தொடரை ஒளிபரப்பப் போகிறதாம். அது தொடர்பான விளம்பரம் கீழே . . .
ஆம்.
நேரு தவறு செய்து விட்டார்.
என்ன தவறு?
மோடி சொல்லும் தவறுதான்.
அதற்கு வாய்ப்பு தராமல் போய் விட்டீர்களே நேரு . . .
பாஜக கூட்டணியில் உள்ள தேவே கௌடாவின் பேரனும் குமாரசாமியின் மகனுமான ரேவண்ணா தொடர்பான பாலியல் காணொளிகள் இப்போது கர்னாடக மாநிலத்தை கலக்கிக் கொண்டுள்ளதாம்.
கர்னாடகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆட்டுக்காரன் சென்றதன் தொடர்ச்சியாகத்தான் இந்த காணொளிகள் வந்துள்ளது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சொந்தக்கட்சியினரின் காணொளிகளை வெளி வர காரணமாக உள்ள ஆட்டுக்காரன் கூட்டணிக்கட்சிக்கு மட்டும் தயவு காட்டுவாரா என்ன!
என்ன ஆட்டுக்காரா, இதெல்லாம் நிஜமா?
ஆட்டுக்காரன் கோவையிலேயே ஜெயிக்கப் போவதில்லை. ஆனால் சங்கிகள் என்ன பீற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள்.
ஸ்டாலின் குடும்பத்திற்க்கும், பழனிசாமி கோஷ்டிக்கும் தேர்தல் முடிந்துவிட்டது , இனிமேல் அவர்கள் எந்த வேலையும் இல்லாமல் வீட்டில் ஓய்வெடுப்பார்கள்,
ஆனால் தலைவர் அண்ணாமலைக்கு மே மாதம் இறுதிவரை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயனம் உள்ளது. "கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டில்லி, உத்தர பிரதேஷ் வரை தலைவர் அண்ணாமலையின் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயனம் அணல் பறக்கும்..!
இது சும்மா சேம்பிள்தான். சங்கிகள் மட்டுமல்ல, பாஜக தமிழ்நாட்டின் ட்விட்டர் பக்கமே ஆட்டுக்காரனின் அயறாத (!) பணிக்கு பயர் விட்டுள்ளது.
கூறையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான்.
இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வந்தது.
கர்னாடக சட்டமன்ற தேர்தல் பணிக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டு பசவராஜ் பொம்மையை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கியது (பொம்மை பாஜக முதல்வர்தான்)
ஆட்டுக்காரனால்தான் வோட்டுக்கள் குறைந்தது என்று கர்னாடக பாஜக ஆட்களே புலம்பியது.
இதே சாதனையை செல்லும் மாநிலங்களில் எல்லாம் ஆட்டுக்காரன் உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
ஆட்டுக்காரனின் சாதனைகள் பற்றி தெரிந்தும் பல மாநிலங்களுக்கு பிரச்சாரத்திற்கு அனுப்பியுள்ள பாஜக தலைமையின் மன தைரியத்தைப் பாராட்டி அவர்களுக்கு கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி சரோஜாதேவி ஆலயமணி திரைப்படத்தில் பயன்படுத்திய ஒரு சோப்பு டப்பாவை பரிசாக அளிக்கிறேன்.
மகேந்திரனின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும் படத்தில் இளையராஜாவின் இசையில் கண்ணதாசனின் வரிகளில் உருவான "செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் என் மீது வீசுதம்மா" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . .
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
கடந்த வருடம் ஆந்திராவில் நடைபெற்ற கொடுமையான விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. மூன்று வண்டிகள் மோதியதால் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட முப்பது பேர் இறந்து போனார்கள். விபத்துக்குள்ளான ஒரு டிரெயினின் ஓட்டுனர் மற்றும் துணை ஓட்டுனர் இருவரும் அலைபேசியில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்ததால்தான் விபந்து நடந்ததாக ரயில்வே மந்திரி அஸ்வினி எழவு பத்திரிக்கையாளர்களிடம் சொல்லியுள்ளார்.
இன்று வந்த செய்தியின்படி அந்த இருவரின் தொலைபேசிகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய போது அவர்கள் தொலைபேசிகளை பேசக்கூட பயன்படுத்தவில்லை, இணையத்தை பயன்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. விபத்திற்கு இவர்கள் காரணமில்லை என்பது தெளிவாகிவிட்டது என்று ரயில்வே உயிரதிகாரிகள் சொல்லி விட்டனர்.
மோடி பெரிதாக பீற்றிக் கொண்ட "கவச்" எனும் பாதுகாப்பு ஏற்பாடு விபத்துக்குள்ளான எந்த டிரெயினிலும் பொருத்தப்படவில்லை, சிக்னல் கோளாறுகளை சரி செய்ய வேண்டும், அதற்கு நிதி வேண்டும் என்பதை புறக்கணித்து மோடி வந்தே பாரத்திற்கு பச்சைக்கொடி காட்டவும் மரண தூதன் மோடியோடு புகைப்படம் எடுக்க செல்ஃபி பாயிண்ட் அமைக்க ஊதாரித்தனமாக கோடிக்கணக்கில் செலவழித்தது ரயில்வே துறை. மோடியைப் போலவேதான் எல்லா மந்திரிகளும் கேவலமானவர்களாகவே இருக்கிறார்கள்.
அதன் கையாலாகத, நிர்வாகம் நடத்த அருகதையற்ற கேவலத்தை மறைக்க, பதில் சொல்ல வாய்ப்பில்லாத இறந்து போன ஓட்டுனர்கள் மீது பழி போட்டார் ரயில்வே மந்திரி. இதில் இந்தாளு மிகப் பெரிய மேதைன்னு வேற சங்கிங்க பீற்றிக் கொண்டார்கள்.
உன் தவறை மறைக்க இறந்தவர்கள் மீது களங்கம் சுமத்திய கேடு கெட்ட, கேவலமான ரயில்வே மந்திரியே, நீ செய்த அவதூறுக்கு பகிரங்க மன்னிப்பு கேள்.